Posts

Showing posts from 2010

ஒரு செய்தியில்...

சகியே ...! ஒரு செய்தியில் எத்தகையை கேள்விகள் வைத்திருந்தாய் தெரியுமா ? ........................ உன்னை பின் தொடர செய்யும்படியான கேள்விகளை .....!
ஒரு சிலை ஆயிரம் செய்திகளை சொல்கிறது பெண்ணும் ஆயிரம் செய்திகளை சொல்கிறாள் சிலை பார்வைகளை மயக்குகிறது பெண் பார்வைகளால் மயக்குகிறாள் அவ்வளவே சங்கதி .....!
மின்சார கம்பியின் மேல் உட்கார பிரியப்படும் பட்டாம்பூச்சியாய் நானிருப்பதை நீ ரசிக்கிறாய் .. உன் மீதான என் ரசனைகளை நீ ரசித்திருப்பினும், பாராமுகம் காட்டிக்கொள்வதில் உனக்கேட்படும் சிலிர்புகளை நான் உணராமல் இல்லை ..சுடு மணலில் நிற்கவே உன்னையறியாமல் நீ விரும்புவதை போலவே ...உன்னையறியாமல் நீ என்னை உணரும் காலம் வர காத்திருப்பேன் ...
நீ இரவு நான் பகல் நாம் பகலிரவு அதிகாலையில் நீ எனக்கு சொல்லும் காலை வணக்கங்கள் என்னை வந்தடைவதென்னவோ இரவில்தான் என்றாலும் உனக்கும் எனக்குமான கால தூர இடைவெளிகளை தட்டச்சு வெகுவாய் குறைத்து விடுகிறது thanx to face book
இல்லாததற்கு தவிப்பதே மனதின் வேலை ....!
இதழ்களில் ரத்தத்தை வரவழைக்காத முத்தம் ......சைவம் .....
வார்த்தைகளே இல்லாமல் ஒரு கவிதை எழுத வேண்டும் ....!
வாங்குவதற்கு ஏங்குவதை போலவே ...கொடுப்பதற்கும் ஏங்க வேண்டும் ...
நீரில்லா ஆற்றங்கரையில் நான் தனிமையில் நின்றிருக்கிறேன் நம் ஈர நினைவுகளோடு ...
கேள்வி கேட்டால் ஏன் எல்லோரும் பதிலையே தருகிறார்கள்
உனைக்காண்பதற்கென்றொருவிழியும் உனைக்காணாதபோது கண்ணீர்சிந்தியழ ஓராயிரம் விழிகளும் வேண்டுமடி .....
க லையை விற்க முடியாது...! அப்படி விற்பது கலையாக இருக்காது ....!!

அருள் விழி பார்த்த போது பூத்த புன்னகை

நான்கு கண்கள் இரண்டு பார்வை ஒரே காதல் நீ என்னை பார்க்காதபோது நான் உன்னை பார்த்தது போல் , நான் உன்னை பார்க்காத போது நீ என்னை பார்த்தாயா ? நீ என்னை பார்க்காத போது நான் உ ன்னை பார்த்த போது நீ எ ன்னை பார்த்தாய்...! அப்போது என்னுள் பிரபஞ்சம் அதிர்ந்தது........ நான் உன்னை பார்க்காத போது நீ என்னை பார்த்ததை நான் பார்த்தபோது உனக்குள் என்ன அதிர்நததென்று நீ சொல்லிவிடு

பெண்

காதல் என்பது மயக்கம் பெண் ஆணின் குழப்பம்

உனக்காக...

உன்னை காண்பதற்கு ஒரு கண்ணும் உனக்காக அழ ஆயிரம் கண்களும் வேண்டும்...

நீ வருவாய் என .....

எங்கே தொடங்கி எங்கே முடிக்கவேண்டுமென்று தெரியாத கதகதப்பான மிக நீண்ட முத்தமொன்றை உனக்காக வைத்திருக்கிறேன்... எப்போது நீ வருவாய் .....
Image
உன் மீதான என் காதல் கடவுளைப் போன்றது தொடக்கமும் இல்லை முடிவும் இல்லை அது போலவே .. என் மீதான உன் காதலும் ' கடவுளை போன்றது உண்டா ? இல்லையா ? நீயே சொல்
பெண் பூட்டும் ஆண் சாவியும் காதலை திறக்கிறார்கள்
Image
முக நூலில் நண்பர் ராஜ் பிரின்ஸ் எழுதியது இதுதான் காதலா? Share Tuesday, 27 April 2010 at 21:23 இதுவரை ஒன்றுமில்லாத வெளிகளில் சுற்றித்திருந்த என்னைச்சுற்றி ஒரு நந்தவனம் தோன்றியது எப்படி? திடீரென்று நான் எப்படி அழகான வனாந்தரத்துக்குள் வந்தேன். இத்தனை நாளும் வெறுமையில் உறங்கிய நான் உன்னைக் கண்டபிறகு வார்த்தைகளின் வெள்ளத்தில் மிதந்தேனே அது எப்படி? நீ யார் எனக்கு? உன்னைப் பார்க்கும் போதெல்லாம் மனம் என்னெவெல்லாமோ செய்கிறதே ஏன்? மனதில் என்னென்னமோ வைத்துக்கொண்டு ஏதேதோ கேட்கிறேன், நீயும் என்னவெல்லாமோ வைத்துக்கொண்டு என்னவோ சொல்கிறாய். இருவரும் எப்போது மனதில் உள்ளதை மட்டும் பேசுவோம்? என் அன்பெல்லாம் உனக்குப் புரியுமா என்பதைக் காட்டிலும் நீ எனதன்பை உணர்ந்தால் அதைத் தாங்குவாயா என்றே நினைக்கிறேன். உன் வருகைக்குப் பிறகு என் மனதிற்கு ஒருகோடிச் சிறகுகள் முளைத்தது எப்படி? நீ யார் எனக்கு, நீ எனக்கு மகிழ்ச்சியா? துயரமா? நீதான் என் உயிரா? நான் வெறும் சொல், நீதான் அர்த்தமா? நீ என் இறைவன் அளித்த வரமா? சாத்தான் தந்த சாபமா? நீதான் இறைவன் எனக்குள் ஊதிய பரிசுத்த ஆவியா? நீ என் ஆன்மாவின் இரத்தமா? உனக்கும் ...
Image
காதலில் பெண் துறக்கிறாள் ... ஆண் திறக்கிறான்
என்னை துயரத்தில் இருந்து மீட்டெடுத்து காப்பாற்றி கழுத்தை திருகி கொலை செய்ய முயற்சிப்பவர்களை என்ன செய்வது என்று அறியாமல் விழிக்கிறேன் .......
IF ONE DAY I BEND , WILL YOU COME TO ME AND HELP ME ? IF I DON'T MAKE IT TO THE FINISH LINE, WILL YOU BE THERE TO TAKE ME ? IF YOUR VOICE MATTERS, WILL I LET YOU BE SILENT ? AND IF ONE DAY YOU CRY, WILL ABLE TO HUSH YOU? IF I ASK YOU TO LISTEN , WILL I HEAR YOUR BREATH? AND IF MY HEART BECOMES TOO LARGE TO CONTAIN, WILL YOU LEND ME YOUR CHEST? AND IF RUN OUT OF WORDS....., WILL YOU CONNECT.... EVEN IN SILENCE? -AJHAR
உன் ஞாபகங்கள் இன்னும் ஏன் தலை விரித்தாடுகின்றன
Image
மௌனமும் கொல்கிறது..... வார்த்தையும் கொல்கிறது..... வாழும் வழி என்ன....?
Image
முகத்தை மறைப்பதை போலவே மனதையும் மறைக்க உன்னால் மட்டுமே முடியும்....
Image
It opens the lungs,washes the countenance,exercises the eyes,and softensthe temper....so cry away. CHARLES DICKENS

சகி..!

Image
உன்னை நான் பிரிய மனமில்லாமல் பிரிந்தபோது நீ ஏன் சிறிதாய் சிரித்தாய் .... உடைந்து அழ இதுதான் முன்னோட்டமா?

காதல்...

Image
இதுதானா நம் காதல் ?

நீயே வெல்வாய் ...

Image
இது வரையிலும் நீயே எனை வென்றாய், இறுதி வரையிலும் நீயே எனை வெல்வாய் ... இதை விட வெற்றி எனக்கு வேறு ஏது ...?

பெண்ணே ...

நான் உன்னோடு இருப்பதை தடுக்க யாராலும் முடியும்.... நான் உன்னுள் இருப்பதை தடுக்க யாரால் முடியும்.... நீ என்னுள் இருப்பதை தடுக்க யாரால் இயலும் .....

அவள் பெயர் மழை

♫ மழையும்... மழை உதிர் காலமும்... மழைக் கு முந்தைய கணமும்... மனதை விட்டு அகலவேயில்லை... ..

என் அப்பன் ... என் அய்யன் .....

என்னை ”அவையத்து முந்தியிருப்ப செயல்” செய்த.... எம் தந்தை மறைந்தார்......