புன்னகை நகரத்தின் பெரு வீதி ஒன்றில் அகல விழிகளோடு எனை தேடி நீ அலைந்ததை என் கனவில் நான் கண்டேன்...
பூ நுகரும் உன் சிறுநாசியில் வழிந்த பெருமூச்சுக்களில் குளிர் காயும் பெரும்காடு ஒன்று எரிகிறதடி....
Sunday, December 25, 2011
Friday, August 12, 2011
உன் அனுமதியில் தெரியும் என் விருப்பம்...!
உன் அனுமதி இருந்தால் ... உன் இதயத்தின் ஓசையை நான் கேற்பேன் ...:)
Wednesday, August 10, 2011
Sunday, July 17, 2011
அன்பே
மௌன கதவை மூட தெரிந்த உனக்கு அதை தாழிட முடியவில்லை
உன் மௌனமே என்னை பேசவைக்கிறது..
எப்போதும் ....!
உன் மௌனமே என்னை பேசவைக்கிறது..
எப்போதும் ....!
Monday, July 4, 2011
முன்னிரவு
மழை பெய்த காலம்...நாம் மையல் கொண்ட நேரம் ...
முத்து கோர்த்த காலம்.. நாம் முத்தம் செய்த நேரம் ..
முன்னிரவு காலம்... நாம் முறுவல் செய்த நேரம்...
கண்ணிமைக்கும் நேரம்... அது கண்ணில் நின்று ஆடும் ...!
Saturday, July 2, 2011
தழுதழுத்த நொடியொன்றில்
நானும் நீயும் தந்தை -தாயுமாய் இருந்தோம் ....
உன் குரல் தழுதழுத்த நொடியொன்றில் ..
நான் உனக்கு மகனாய் பிறந்தேன் .....
Saturday, May 21, 2011
காயத்தில் கண்ணீர் சிந்தும் காலமே ..!
ரணத்தின் மீது கண்ணீர் சிந்தாதே காலமே....ஒரு நொடியில் கடந்து போகும் காலமே... ஆயிரம் ஆச்சர்யங்களையும் ஆயிரம் அதிர்சிகளையும் ஏன் நொடிக்கொன்றாய் மாறிமாறி வைத்திருக்கிறாய் ...புன்னகைசெய்து புன்னகை செய்து மனம் புண்ணாய் போனது .....ஒரு நொடி பூ பூக்கிறாய் ...மறு நொடி அனலாகிறாய் ...காலமே.. ..எனை ஏன் வதைக்கிறாய் ...உன்னோடு பயணிக்க என்னை ஏன் பணிக்கிறாய் ...உன்னோடு உடன்பட ஏன் என்னை சிதைக்கிறாய் ..தொல்காப்பியா ..தமிழ் திருவுருவே ...என்னோடு துணைக்கு வா ...மாணிக்கவாசகா... என்னோடு வாசம் செய் ... மகாகவியே இன்னும் கொஞ்சம் தமிழ் சொல்லிகொடு.. ...இந்த காலத்தை சபிக்க......
Monday, May 9, 2011
இன்னும் கொஞ்சம்....
இன்னும் கொஞ்சம் சினம் கொள் நெஞ்சே ....
இன்னும் கொஞ்சம் நேசம் கொள் நெஞ்சே
இன்னும் கொஞ்சம் துரோகம் தாங்கு மனமே ..
இன்னும் கொஞ்சம் இரக்கம் செய் மனமே ...
இன்னும் கொஞ்சம் பயணம் செய் காலமே .....:)
Wednesday, February 16, 2011
Subscribe to:
Posts (Atom)