Tuesday, March 31, 2009

வேண்டும்

இரவும்,பகலும் அல்லாத ஒரு பொழுது ...
ஞாயிறும்,திங்களும் கலந்த ஒரு நட்சத்திரம்...
காயங்களுக்கு மருந்து தடவ கவிதை....
எப்போதும் விழியோரத்தில் தித்திப்பாய் ஒரு துளி கண்ணீர் ...

Thursday, March 26, 2009




பருகத் தவிக்கும் மனது

உன் மீதான என் விடுபடமுடியாத விருப்பம்
கானல் நீர் என்று தெரிந்திருந்தும்
பருகத்தவிக்கிறது மனது.....



பறக்கத் தவிக்கும் மனது

பறக்கத் தெரிந்த
சிறுபறவைக்கு
பெருந்சிறகு




ஏன் இப்படி மயக்கினாய் ....!

ஒரே பார்வையில் எனை நெருங்கினாய்
ஒரே தீண்டலில் எனை உருக்கினாய்
ஏன் இப்படி மயக்கினாய்....!
நிசப்தத்தின் பேரிரைச்சல் .....

இருள் என்பது மிகக் குறைந்த ஒளி எனப்படும்போது...
நிசப்தம் என்பது மிகக் குறைந்த ஒலியே ....
நிசப்தத்தின் பேரிரைச்சலை தேடிக்கொண்டிருக்கிறேன்

Monday, March 23, 2009


விடுபட முடியாத விருப்பம்

நான் தழுவ ....
நீ நழுவ ..
நான் தழுவத் தழுவ ....
நீ நழுவ நழுவ....
கண்கள் சொருகச் சொருக ...
காமத்தீ பெருகப் பெருக ...
நீ உருக .. உருக..
தீப் பெருகப் பெருக ...
அன்பே உன்னை ஆரத் தழுவத் தழுவ
அந்தக் கணம்
ஆயிரம் கோடிக் கைகள் வேண்டுமடி.....
தாவர தர்மம்

பச்சை உலகம்
தாவரம் பச்சை
தாவரத்தின் தளிரும் ,தண்டும் பச்சை
இலையும் ,கிளையும் பச்சை
ஒரு பூவும் பச்சை நிறத்தில் இல்லை
பொம்மைகள் விளையாடும் மைதானம்

ஒரு கவிதை இரவும்....
சில கண்ணீர் நினைவுகளும்.....


உன்னிடம் என் காதலை சொன்ன அன்று
நட்டு வைத்த ரோஜா செடி
நீண்டு பெரிதாகிகொண்டே போகிறது
உனக்கும்
எனக்கும்
இருக்கும் இடைவெளியை போல ....