எப்போதும் விழியோரத்தில் தித்திப்பாய் ஒரு துளி கண்ணீர் ...
Thursday, March 26, 2009
பருகத்தவிக்கும்மனது
உன் மீதான என் விடுபடமுடியாத விருப்பம் கானல் நீர் என்று தெரிந்திருந்தும் பருகத்தவிக்கிறது மனது.....
பறக்கத்தவிக்கும்மனது
பறக்கத் தெரிந்த சிறுபறவைக்கு பெருந்சிறகு
ஏன் இப்படி மயக்கினாய் ....!
ஒரே பார்வையில் எனை நெருங்கினாய் ஒரே தீண்டலில் எனை உருக்கினாய் ஏன் இப்படி மயக்கினாய்....!
நிசப்தத்தின்பேரிரைச்சல் .....
இருள் என்பது மிகக் குறைந்த ஒளி எனப்படும்போது... நிசப்தம் என்பது மிகக் குறைந்த ஒலியே .... நிசப்தத்தின் பேரிரைச்சலை தேடிக்கொண்டிருக்கிறேன்
Monday, March 23, 2009
விடுபடமுடியாதவிருப்பம்
நான் தழுவ .... நீ நழுவ .. நான் தழுவத் தழுவ .... நீ நழுவ நழுவ.... கண்கள் சொருகச் சொருக ... காமத்தீ பெருகப் பெருக ... நீ உருக .. உருக.. தீப் பெருகப் பெருக ... அன்பே உன்னை ஆரத் தழுவத் தழுவ அந்தக் கணம் ஆயிரம் கோடிக் கைகள் வேண்டுமடி.....
தாவரதர்மம்
பச்சை உலகம் தாவரம் பச்சை தாவரத்தின் தளிரும் ,தண்டும் பச்சை இலையும் ,கிளையும் பச்சை ஒரு பூவும் பச்சை நிறத்தில் இல்லை