காயத்தில் கண்ணீர் சிந்தும் காலமே ..!

ரணத்தின் மீது கண்ணீர் சிந்தாதே காலமே....ஒரு நொடியில் கடந்து போகும் காலமே... ஆயிரம் ஆச்சர்யங்களையும் ஆயிரம் அதிர்சிகளையும் ஏன் நொடிக்கொன்றாய் மாறிமாறி வைத்திருக்கிறாய் ...புன்னகைசெய்து புன்னகை செய்து மனம் புண்ணாய் போனது .....ஒரு நொடி பூ பூக்கிறாய் ...மறு நொடி அனலாகிறாய் ...காலமே.. ..எனை ஏன் வதைக்கிறாய் ...உன்னோடு பயணிக்க என்னை ஏன் பணிக்கிறாய் ...உன்னோடு உடன்பட ஏன் என்னை சிதைக்கிறாய் ..தொல்காப்பியா ..தமிழ் திருவுருவே ...என்னோடு துணைக்கு வா ...மாணிக்கவாசகா... என்னோடு வாசம் செய் ... மகாகவியே இன்னும் கொஞ்சம் தமிழ் சொல்லிகொடு.. ...இந்த காலத்தை சபிக்க......

Comments

Popular posts from this blog

பத்மாவதி