பத்மாவதி

 குரு : அதிக மகத்துவம் வாய்ந்தது எது ?

அழகா? குணமா ?

பத்மாவதி :  குணம்... 

குரு : அப்போது அழகு ..?

பத்மாவதி : அது காண்பவர் கண்களை பொறுத்தது …

குரு : அப்படியென்றால் …?

பத்மாவதி : சிலருக்கு கல்லில் சிவலிங்கம் தெரியும்…  சிலருக்கு சிவலிங்கமே கல்லாக தெரியும்..

குரு : ம்ம்…

வாழ்க்கை என்றால் என்ன மூன்றே சொற்களில் சொல் …

பத்மாவதி : ஆன்மீகம், அன்பு,தியாகம் 

குரு : அன்பு என்றால் என்ன ?

பத்மாவதி : இறைவனின் கண்களில் இருந்து சொரியும் ஆனந்த கண்ணீர் …

குரு : கண்ணீரின் அர்த்தம் என்ன…?

பத்மாவதி : சுக துக்கங்களின் எல்லைக்கோடு …

குரு : சுகம் என்றால் என்ன,,,?

பத்மாவதி : பிரமை 

குரு : தங்களுக்கு போர் நீதி கூட தெரியுமா …?

பத்மாவதி : ம்…

குரு : போர்க்களத்தில் மிகப்பெரிய ஆயுதம் எது …?

பத்மாவதி : துணிச்சல்…

குரு ; வாழ்க்கையில் மிகக் கடினமான காலம்..?

பத்மாவதி : முடிவுகளுக்காக காத்திருக்கும் காலம் ..

குரு : மிகப்பெரிய பரிசு : 

பத்மாவதி : ஆசிர்வாதங்கள் …

  • பத்மாவதி - S L B


Comments

Popular posts from this blog